Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கெட்டுப்போன சிக்கன்.. ஊசிப்போன குழம்பு..! மதுரை உணவகங்களில் அதிரடி சோதனை..!

Muthu Kumar August 24, 2022 & 23:45 [IST]
கெட்டுப்போன சிக்கன்.. ஊசிப்போன குழம்பு..!  மதுரை உணவகங்களில் அதிரடி சோதனை..!Representative Image.

தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் சவர்மா கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தமிழகத்தில் அணைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி உணவகங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் வரை உள்ள சாலையில் இயங்கி வரும் உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரி நடத்திய சோதனையில் 6 உணவகங்களில் செயற்கை வண்ணம் பூசப்பட்ட 25 கிலோ சிக்கன், 5 கிலோ அழுகிய பழங்கள், 23 கிலோ அளவிலான கெட்டுப்போன பரோட்டா, 9 லிட்டர் ஊசிப்போன குழம்பு மற்றும் 9 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என 6 உணவகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அந்த 6 கடைகளுக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. 

மதுரையின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் கெட்டுப்போன உணவுகள் கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்