சென்னை: மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழாவிற்குப் பேனர் வைக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்திக்கவுள்ளதாகவும், அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியானது இந்த மாத இறுதிக்குள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது, மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஊக்கத் தொகையையும் நடிகர் விஜய் வழங்கவுள்ளார்.
இந்நிலையில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவுள்ள இந்த விழாவிற்கு விளம்பர பேனர், பிளக்ஸ், கட்அவுட் உள்ளிட்டவை வைக்க கூடாது என நடிகர் விஜய், மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…