அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதி மன்றம் நாளை ஜூலை 11 ஆம் தேதி தீர்ப்பளிக்க இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் கூட்டப்படும் பொதுக்குழு கூட்டத்தின் பேனரில் ஓபிஎஸ் புகைப்படம் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நாளை (11/07/2022) காலை 09.15 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் 90% நிறைவடைந்துள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளை முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், காமராஜ், ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் போல் மின்னணு என்னுடன் கூடிய அட்டையை வழங்கி அதை ஸ்கேன் செய்த பின்னர் தன உள்ளே நுழைய முடியும் என்ற வகையில் (RFID - Radio Frequency Identification system) எனப்படும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேனர்களுடன் கூடிய 16 அதிநவீன நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 12 நுழைவு வாயில்களும், 250 செயற்குழு உறுப்பினர்களுக்கு 4 நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு நடைபெறும் இடம் முழுவதையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்னர் நடந்த பொது குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் புகைப்படம் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வைக்கப்பட்டிருக்கும் பேனர்களில் ஓபிஎஸ் புகைப்படங்கள் இல்லாதது அவரது ஆதரவாளர்களிடையே அதிற்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…