Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Politic News : “ஜெயலலிதா அண்ணன் வந்திருக்கேனு சொல்லு” பங்குக்கு வந்த புதிய நபர்..!

Muthu Kumar July 10, 2022 & 11:45 [IST]
Politic News : “ஜெயலலிதா அண்ணன் வந்திருக்கேனு சொல்லு” பங்குக்கு வந்த புதிய நபர்..!Representative Image.

Politic News : தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளில் எனக்கும் பங்கு வேண்டும் எனவும் நான் தான் ஜெயலலிதாவின் அண்ணன் என கூறி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த சில ஆண்டுகள் முன்னதாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது போயஸ் கார்டன் இல்லத்தை அதிமுக “அரசு இல்லமாக” அறிவித்தது. இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த 2020ம் ஆண்டில் தீபக், தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் வாரிசு என உத்தரவிடப்பட்டது. இதனைதொடர்ந்து, போயஸ் கார்டன் இல்லத்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் மைசூரை சேர்ந்த 83 வயது முதியவர் ஒருவர் தான் ஜெயலலிதாவின் அண்ணன் என வழக்கு தொடர்ந்துள்ளார். 

மைசூரை சேர்ந்த 83 வயதான என்.ஜெ.வாசுதேவன் என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நான் தான் ஜெயலலிதாவின் அண்ணன் என்றும், தீபக், தீபாவை வாரிசுகளாக அறிவித்ததை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்