அதிமுக கட்சி அலுவலகத்தில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு இன்றை அளித்துள்ளார்.
அதிமுக வரும் ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தவுள்ளது, அதற்கு முன்னர் அந்த கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் ஓ.பன்னிர்செல்வம் ஆதரவாளர்களும் மாறிமாறி கூறிவருகின்றனர். இதனை தொடர்ந்து கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஓபிஎஸ்-ம் இபிஎஸ்-ம் தொடர்ந்து தனித்தனியே மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர். அதனால், அ.தி.மு.கவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அ.தி.மு.கவினரே இரு பிரிவாகப் பிரிந்து மோதலில் ஈடுபடும் வாய்ப்பும் உள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகத்திற்கும் பொதுக்குழு கூட்டத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு அளித்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணையை வரும் ஜூன் 22 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…