தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
பசும்பொன்னில் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளுடன் கார்களில் ஒன்றாக சென்று கொண்டிருந்தனர்.
மானாமதுரை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்ததால், அடுத்தடுத்து வந்த கார்கள் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் 10 கார்கள் சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக அமைச்சர்கள் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினர். எனினும் உடன் வந்த 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…