Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓபிஎஸ்-ஐ வெளியேற சொல்லி கோஷம்...அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு..!

madhankumar June 23, 2022 & 11:05 [IST]
ஓபிஎஸ்-ஐ வெளியேற சொல்லி கோஷம்...அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு..!Representative Image.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடமான ஸ்ரீ வாரு மண்டபத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் வந்தார் அவரோடு அவரின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் வந்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வெளியேற வேண்டும் என கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதில் கோஷம் எழுப்பினர்.

இதனையடுத்து மேடையில் அமர்ந்திருந்த வைத்தியலிங்கத்தை துரோகி வெளியேறு என உறுப்பினர்கள் கோஷமிட்டதால் அவர் மேடையிலிருந்து எழுந்து கீழே சென்றார். இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீ வாரு மண்டபத்திற்கு தற்போது வந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு நடைபெறும் எனவும் பல்வேறு காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்