Tamilnadu News Live : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நல குறைவால் தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொண்டு வந்தார். இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தர உள்ளார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…