சிவகாசி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்டத்தில் பங்கேற்று பேச்சை தொடங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி கூட்ட அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்த அனைத்து அதிமுக நிர்வாகிகளின் பெயரையும் நீண்ட நேரம் மேடையேறி மைக் மூலமாக வாசித்துக் கொண்டிருந்ததால் எரிச்சல் அடைந்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவராக எழுந்து கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக ஏராளமான இருக்கைகள் ஆட்கள் இன்றி காலியாகவே கூட்டம் நிறைவு பெறும் வரை இருந்தது. இதனைப் பார்த்து அப்செட் ஆன முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில் என்ன பேசுவது? என்றே தெரியாமல் உளறியபடி, தடுமாற்றத்துடன் மேடையில் மைக்கில் பேசியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…