அதிமுக தற்போது பல குழப்பங்களை சந்தித்து வருகிறது. அந்த கட்சியில் எப்போது ஒற்றை தலைமை பிரச்னை உருவெடுத்ததோ அப்போதிருந்து இந்த குழப்பங்கள் நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு ஓபிஎஸ் தரப்பு இது செல்லாது, அதிமுகவின் பொது செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்யவேண்டும் என போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனையடுத்து கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி ஓ.பன்னிர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவதாக தற்போது இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதனையடுத்து நாந்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனவே நன் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவை விட்டு நீக்குகிறேன் என அறிக்கை வெளியிட்டார். மேலும் சசிகலா இவர்கள் இருவரும் இல்லை நாந்தான் அதிமுகவின் பொது செயலாளர் எந்த முடிவுகள் எடுக்கவேண்டும் என்றாலும் அதை நாந்தான் எடுக்க வேண்டும் என கூறிவருகிறார்.
இந்நிலையில் அதிமுகவும் துணை பொது செயலாளராக கே.பி. முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கழக தலைமை நிலை செயலாளராக எஸ்.பி. வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜு, சி.வி சண்முகம் உள்ளிட்ட 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…