அதிமுகவில் ஏற்பட்ட இரட்டை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி அணி ஓ.பன்னிர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்தது.
இதனையடுத்து எட்டப்படிதான் அதிமுகவை தலைமையேற்று நடத்தவேண்டும் என கூறி கடந்த 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம் முன்பே இரண்டு அணியினரும் மோதிக்கொண்டதில் கலவரம் ஏற்பட்டது அப்போது ஓபிஎஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடி முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.
இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது, இந்நிலையில் இதற்கு எதிராக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சார்பாக தனித்தனியே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஸ்குமார் தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த தீர்ப்பை அடுத்து சென்னை பசுமையை சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…