அதிமுக வழக்கரைஞர் இங்பத்துறை சென்னை பசுமை வழிசாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் நீட் தேர்வு நடந்து முடிந்தது, நீட் தேர்வுக்கு இதுவரை 8 மாணவர்கள் மரணம் அடைந்துள்ளனர். திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறியது ஆனால் நீட் தீர்வு நடந்தே முடிந்துவிட்டது அதை யாரும் கண்டுக்கவில்லை.
இந்த நீட் தேர்வு மரணங்களை மறைக்கத்தான் இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தை திமுக நடத்தி விட்டது என சந்தேகம் எழுந்துள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்துகொண்டிருக்கும் போதே இந்த நீட் தேர்வும் நடந்துவிட்டது என கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அளவீடு செய்து வருகிறது. அவரது முன்னோர்கள் கட்டிய வீட்டை எல்லாம் எதற்கு தற்போது அளவீடு செய்கிறார்கள். குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்க்கு நோட்டீஸ் கொடுத்தது எதற்கு? அனைவரும் இதை பற்றி பேச வேண்டும் இவர்கள் செய்த இந்த தவறுகளை மறந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இதை செய்கிறார்கள்.
திமுக அரசு தொடர்ந்து அதிமுகவினர் மீது பழிவாங்குஜ்ம் எண்ணத்தில் இதுபோன்று செய்துவருகிறது, என குற்றம் சாட்டினார். ஒரு செய்தியை மறைக்க இன்னொரு செய்தியை கிளப்பி விடுவது தான் திமுகவின் வேலையாக இருக்கிறது.
திட்டமிட்ட நீட் தேர்வை நடத்தத்தான் இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தை நடத்திவருகின்றனர் என அவர் குற்ற சாட்டியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…