அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது அவரது சொந்த கட்சியினரே தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவிற்கு பின்னர் கட்சிக்கு பொது செயலலலர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதனிடையே பொது செயலாளர் பதவி வேண்டாம் என கூடி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவியை உருவாக்கி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னிர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் கடந்த 5 ஆண்டுகளாக பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
மேலும் நேற்று நடந்த கூட்டத்திலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் ஒற்றை தலைமை ஏற்கவேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனிடையே தேனியில் அதிமுகவை ஓபிஎஸ் தான் வழிநடத்தவேண்டும் என அவரது ஆதரவாளர் ஒருவர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரில் ஏறி புறப்படும்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் காரின் மீது ஏறிநின்று தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் மற்றத்தொண்டர்கள் உதவியோடு ஜெயக்குமார் புறப்பட்டுச் சென்ற நிலையில், ஜெயக்குமார் அதிமுகவை அழித்து வருவதாக அக்கட்சியை சேர்ந்த பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…