ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் காபூல் காவல்துறைத் தலைவரின் தாலிபான்களால் நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறியுள்ளார்.
காபூலின் தஷ்டி பார்ச்சி பகுதியில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறியுள்ளார். குண்டுவெடிப்பு நடந்த பகுதி ஆப்கானிஸ்தானின் சிறுபான்மை ஷியா பிரிவு முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதில் இருந்து தலிபானின் தலைமைப் போட்டியாளரான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவ்வப்போது ஆப்கானில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி மக்களை கொன்று குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…