Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அப்பாடா!! இயல்பு நிலைக்குத் திரும்பிய தமிழகம்... கடற்கரையில் குவிந்த மக்கள்! 

kanimozhi Updated:
அப்பாடா!! இயல்பு நிலைக்குத் திரும்பிய தமிழகம்... கடற்கரையில் குவிந்த மக்கள்! Representative Image.

மாண்டஸ் புயல் கரை கடந்ததை தொடர்ந்து பழவேற்காட்டில் இயல்புநிலை திரும்பியது. இதனால் மக்கள் கடற்கரைகளில் வழக்கம் போல் சுற்றி வருவதை காண முடிகிறது. 

தென்மேற்கு வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவானதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் மீனவ மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. 

கடந்த நான்கு நாட்களாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் அவர்களது மீன்பிடி படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கனமழை காரணமாக மீனவ மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்தனர். குளத்துமேடு, கோரைக்குப்பம் மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.  

இன்று அதிகாலை மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததை தொடர்ந்து பழவேற்காட்டில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. கடல் அலைகளின் சீற்றம் நேற்றைவிட இன்று கொஞ்சம் குறைவாகவே காணப்படுவதால் குழந்தைகள் கடற்கரையில் விளையாடுவதையும், மக்கள் வழக்கம் போல் உலா வருவதையும் காண முடிகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்