பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அப்படி கேட்பாறற்று சுற்றி திரியும் தெருநாய்களுக்கு ஒரு இளம்பெண் தினமும் உணவு வழங்கி வந்துள்ளார். அந்த வகையில், எப்பவும் போல நேற்று முன்தினம் இரவும் அந்த இளம்பெண் தெருநாய்களுக்கு உணவு முயற்சித்துள்ளார். இதற்கு அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துடன், அந்த பெண்ணுடன் தகராறு செய்துள்ளனர்.
இவர் உணவு வழங்குவதால் தான் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனால் தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…