Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜூலை வரை இப்படித்தான்.. தக்காளியால் கண்ணீரில் மக்கள்!!

Sekar May 21, 2022 & 18:16 [IST]
ஜூலை வரை இப்படித்தான்.. தக்காளியால் கண்ணீரில் மக்கள்!!Representative Image.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ. 7 க்கு விற்றதால் விற்றதால் விவசாயிகள் கண்ணீர் வடித்த நிலையில், இன்றைய நிலவரப்படி 1 கிலோ தக்காளி ரூ.100 க்கு விற்பனையாவதால் குடும்பஸ்தர்கள் கணீர் வடிக்கின்றனர். இந்த விலை உயர்வு ஜூலை வரை நீடிக்கும் என கூறப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் சந்திரன், ''சென்னை கோயம்பேடு சந்தைக்கு தினமும் 60 லாரிகளில் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 40 லாரிக்கும் குறைவாகவே வருகிறது. கோயம்பேட்டில் தக்காளி தேவை தினசரி 400 டன்களாக இருக்கும் நிலையில், வெறும் 250 டன் மட்டுமே வரத்து உள்ளது. 

இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை கடுமையாகக் குறைந்ததால், பல சிறு விவசாயிகளால் அடுத்த முறை தக்காளி பயிரிடப் போதுமான லாபத்தை எடுக்க முடியவில்லை. எனவே, மீண்டும் தக்காளி அறுவடைக்கு இரண்டு மாதங்கள் வரை ஆகும் என்பதால், ஜூலை கடைசி வரை தக்காளியின் விலை குறைய வாய்ப்பில்லை'' என்று தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்