இந்துக்கடவுள்களை இழிவுபடுத்தி பேசும் நபர்களை உடனடியாக கைது செய்யவிடும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசிய கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மீது புகார் வந்தவுடன் அந்த சேனலின் நெறியாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்தோம். இதற்கு போட்டியாக இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி பேசிய இந்து தமிழ் பேரவையைச் சேர்ந்தவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தோம்.
இந்நிலையில் இதே போல பிரச்னை திமுக ஆட்சியிலும் தலைதூக்க தொடங்கியுள்ளது. U2 Brutus என்ற யூடியூப் சேனலில் சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்தும் வகையில் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இந்த கோயிலில் உள்ள நடராஜர் மற்றும் தில்லைக்காளி குறித்து மைனர் விஜய் என்ற U2 Brutus சேனல் நிர்வாகி வீடியோ வெளியிட்டிருந்தார். இவரை கைதுசெய்யக்கோரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சிதம்பரத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும்.சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…