Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐந்தடுக்கு பாதுகாப்பு.. சென்னை வரும் பிரதமருக்காக.. போக்குவரத்தும் மாற்றம்!!

Sekar May 24, 2022 & 18:55 [IST]
ஐந்தடுக்கு பாதுகாப்பு.. சென்னை வரும் பிரதமருக்காக.. போக்குவரத்தும் மாற்றம்!!Representative Image.

பிரதமர் மோடி சென்னை வரும் 26 ஆம் தேதி சென்னை வரவுள்ளதை அடுத்து சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட உள்ளது. 

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் மே 26 ஆம் தேதி சென்னை வருகிறார். அப்போது ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

முன்னதாக, மே 26 ஆம் தேதி காலை ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை வரும் அவருக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்க உள்ளனர். 

இந்நிலையில், பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகர் முழுவதும், சுமார் 10 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்