Politics : அதிமுக கட்சி மற்றும் அதிமுக கொடியை விரைவில் கைப்பற்றுவோம் என ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் திமுக ஆட்சி முடிந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், டெல்டா விவசாயிகள் தற்போது நெல் விதை இல்லாமல் தவிப்பதால் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிர்த்தார். மேலும், தமிழகத்தில் பாஜக வளர்வதாகக் கூறினாலும் பாஜக வளரவில்லை என்பதே உண்மை என கூறினார்.
இந்நிலையில், மக்கள் ஆதரவு தனக்கு அதிகளமாக உள்ளதாகவும் விரைவில் அதிமுக கொடியையும் கட்சியையும் கைப்பற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…