வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள போது ஓபிஸ், இபிஎஸ் தங்களது சுயலத்திற்காக கட்சியை கோமா நிலைக்கு கொண்டு சென்று உள்ளனர். என்னை போன்று எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர்களால் தான் கட்சியின் பொது செயலாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும் என கே.சி.பழனிச்சாமி கூறியுள்ளார்.
தன்னுடைய 13 வயதில் எம்.ஜி.ஆரின்.அதிமுகவில் சேர்ந்து 23 வயதில் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டு, தனது 24 வயதில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான இளம் நபர் என்ற பெருமையைப் பெற்ற கே.சி.பழனிசாமி அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பெட்டியில் கூறியுள்ளதாவது,
பொதுக்குழுவிற்கான தேதியை முடிவு செய்துவிட்டு நீதிமன்றத்திடம் அனுமதி கேட்பது எந்த விதத்தில் நியாயமாகவும் என கேள்வி எழுப்பியுள்ளார். அனுமதி வாங்கிவிட்டு அல்லவா பொதுகுழுக் கூட்டத்திற்கான தேதியை முடிவு செய்திருக்க வேண்டும்! நீதிமன்றம் அதை விசாரித்து தனது தீர்ப்பை வழங்க சில நாட்கள் ஆகும் அல்லது அதை தேர்தல் ஆணையத்திடம் அனுப்பிவைக்கும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
மேலும் இபிஎஸ் தனது சுயநலத்திற்காக கட்சியை சிதைத்துக் கொண்டு உள்ளார். அதே நேரம் ஓபிஸ்ஸும் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இல்லை. நிச்சியம் மூன்றாம் தலைமை வேண்டும். தொண்டர்களின் மன நிலையும் அதுவாகவே உள்ளது. தொண்டர்கள் எதிர்பார்ப்பது யாருக்கும் அடிமையாக இல்லாமல் சுயமாக செயல்படும் தலைவரை தான். அது இபிஎஸ்-ம் இல்லை, ஓபிஎஸ்-ம் இல்லை, சசிகலாவும் இல்லை, அந்த புரட்சி பயணம் ஆன்மீக பயணமாக மட்டுமே இருக்கும் அதில் நாட்டம் கொண்ட ஒருவரால் தன கட்சியின் தலைமை ஏற்க முடியும், அதற்கான தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் நான் அந்த தேர்தலில் போட்டியிடுவேன் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…