Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Politic News : “இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன்” ஜெயக்குமார்.

Muthu Kumar June 18, 2022 & 16:20 [IST]
Politic News : “இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன்” ஜெயக்குமார்.Representative Image.

Politic News : அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கட்சிக்குள் உள்ள இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுகவை பொறுத்தவரை கட்சிக்கு ஒற்றைத் தலைமை யார் என்பது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமை பொறுப்பை ஏற்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரண்டு தரப்பும் ஆர்வம் காட்டுகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், பெரம்பூரின் அதிமுக நிர்வாகி மாரிமுத்து சட்டையில் ரத்தக்கறைகளுடன் அதிமுக அலுவலகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் “எடப்பாடி ஆளானு கேட்டு அடிக்கிறாங்க" என கூறினார். மேலும், இந்த மாரிமுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோடு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது “இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன்” என கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்