Politic News : தமிழகத்தில் பிரபல அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு 23 தீர்மானங்களை மட்டுமே அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இதனைதொடர்ந்து, அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் 31 தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிமுக பொதுக்குழு தீர்மானம் இயற்றியது.
மேலும், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…