Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காலையில் தேர்தலில் வெற்றி மறுநாள் மரணம்..!

madhankumar June 27, 2022 & 19:40 [IST]
காலையில் தேர்தலில் வெற்றி மறுநாள் மரணம்..!Representative Image.

மத்திய பிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ருக்மணி பாய் என்ற பந்தலை கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த பெண் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஜெயந்தி பாய் என்பவர் போட்டியிட்டார். கடந்த சனிக்கிழமை மாலை இந்த தேர்தலுக்கான முடிவுகள் வெளியானது. ஜெயந்தி பாயை எதிர்த்து போட்டியிட்ட ருக்மணி பாய் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் ருக்மணிபாயின் குடும்பத்தினர் மற்றும் உறவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் ருக்மணி பாய் நேற்று திடீரென உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த அம்மாவட்ட கலெக்டர் ரிஷி கார்க், ருக்மணிபாயின் திடீர் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மரணமடைந்த ருக்மணிக்கு ராஜேஷ் என்ற கணவரும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்,  மனைவியின் மரணம் குறித்து, ராஜேஷ் கூறுகையில், ‘‘பஞ்சாயத்து தேர்தலில் மக்களின் மனம்கவர்ந்த அவர்களின் ஆதரவுடன் ருக்மணி பாய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து இரவில் வெற்றி கொண்டாட்டங்கள் நடந்தன. பின்னர் உணவு உண்டு விட்டு இரவு உறங்கச் சென்றார். துரதிருஷ்டவசமாக காலையில் எனது மனைவி ருக்மணி பாய் எழுந்திருக்கவில்லை’’ என்று கண்ணீருடன் கூறினார்.

வெற்றிக்கனியை எட்டிப் பறித்த ருக்மணி பாயின் உயிர் அன்று இரவே அவரை விட்டு பிரிந்ததால் அப்பகுதியில் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்