கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது.
இந்நிலையில், இப்போராட்டத்தையும் வன்முறையையும் கணிக்க தவறியது உளவுத்துறையின் தோல்வி என பல பத்திரிகையாளர்கள் கூறிவந்தனர்
இதனையடுத்து, கள்ளக்குறிச்சி கலவரம் விவகாரத்தில் வதந்திகளை பரப்பிய 32 யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படியான தகுந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக புதிதாக பதவியேற்ற எஸ்பி பகலவன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கள்ளக்குறிச்சியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் குறித்து பல வதந்திகள் இந்த யூடியூப் சேனல்களில் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இதுவரை, மாணவி மரணம் குறித்து 32 யூடியூப் சேனல்களில் வதந்திகள் பரப்பப்பட்டது என்றும் இதுகுறித்த கணக்கெடுப்பு முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பி பகலவன் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…