அதிமுக பொது குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த பொது குழுவில் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்கப்பட இருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மனுதாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை இல்லை என தீர்ப்பு வழங்கியிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்த ஓபிஎஸ் தரப்பின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பொது குழுவில் புதிதாக எந்த தீர்மானமும் நிறைவேற்ற கூடாது என தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமை கனவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் இந்த ஒற்றை தலைமை பிரச்சனையானது எழுந்தது. இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஸ் தரப்பினர் மாறி மாறி கருத்து மோதல்கள் மூலமும், போஸ்டர்கள் மூலமும் தங்களது ஆதரவும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர். பலர் ஒற்றை தலைமை வேண்டும் என கூறிவந்தனர். மேலும் சிலர் ஒற்றை தலைமை வேண்டாம் எனவும் கூறிவந்தனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு மிக முக்கியமானதாக பார்ப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…