அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செம்மலை, ஆர்.பி.உதயகுமார் போன்றோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசளை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் பாஜக தன எதிர்க்கட்சி என்ற மாய பிம்பத்தை உருவாக்கி வருகிறது. அனால் தற்போது தமிழகத்தில் அதிமுகத்தான் எதிர்க்கட்சி, அது அனைவர்க்கும் தெரியும் ஒரு எதிர்க்கட்சியாக தனது கடமையை தொடர்ந்து செய்யும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார் . மேலும் எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அதிமுக பின்தங்கி இருப்பது போன்ற மாய தோற்றம் சமீப காலமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…