சேலத்தில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், பணம் கேட்டு நச்சரித்த இளைஞரை, கட்சி நிர்வாகிகள் சரமாரியாகத் தாக்கி அப்புறப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை தலைமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர், அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் நேரடியாக சென்று பணம் கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டத்தின்போது சதீஷ் அனைவரையும் தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகள், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலத்தின் காரின் முன்புறம் சென்று பணம் கேட்டதால், அவரை சரமாரியாக தாக்கினர்.
பின்னர், சதீஷின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற அதிமுக நிர்வாகிகள் அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…