நெல்லையில் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் நகரின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள அரசியல் வசனங்கள் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தமது 49வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் வாழ்த்துப் போஸ்டர்களை ஒட்டிவருகின்றனர். அந்த வகையில், நெல்லையில் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரம்மாண்ட வடிவத்தில் ஒட்டப்பட்டுள்ள அந்த வாழ்த்து போஸ்டர்களில், கையில் செங்கோளுடன் விஜயின் படம், தமிழக சட்டமன்ற கட்டிடம், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் படம் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதோடு, 'நாளைய முதலமைச்சருக்கு பிறந்தநாள் விழா' என அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பாளையங்கோட்டையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கட்டிடத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ள விஜய் பிறந்தநாள் போஸ்டரில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வயதான பெண்மணி உடன் இருக்கும் புகைப்படமும் அதேபோல் விஜய், வயதான பெண்மணியுடன் இருக்கும் புகைப்படமும் இடம் பெற்றிருப்பதோடு, நாளைய முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் நாளைய முதல்வரே... மேற்கே மறைந்த சூரியன் கிழக்கே உதித்தே தீரும்.. என்பது உள்ளிட்ட பல அரசியல் வசனங்களோடு, நெல்லை நகரின் சுவர்களில் ஜொலிக்கும் விஜய் பிறந்தநாள் வாழ்த்துப் போஸ்டர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…