Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Airtel-Plans Increase: வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் ஏர்டெல்....விலையை உயர்த்த திட்டம்..!

madhankumar May 23, 2022 & 17:40 [IST]
Airtel-Plans Increase: வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் ஏர்டெல்....விலையை உயர்த்த திட்டம்..!Representative Image.

ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை அறிவிக்கவுள்ளது.

தற்போது நாடுமுழுவதும் விலைவாசி உயர்வானது அதிகரித்து காணப்படுகிறது. பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விளையும் அதிகரித்து காணப்படுகிறது. இது அணைத்து நிறுவனங்களையும் பாதித்துள்ளது. இதன் எதிரொலியாக அணைத்து மொபைல் கட்டணங்களும் உயரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்த விருப்பதாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளனர். இதனை உறுதி செய்யும் விதமாக ஏர்டெல் நிறுவனம் இதனை முன்கூட்டியே அறிவித்துள்ளது. விரைவில் பிரீபெய்டு சேவையின் கட்டணம் உயரவிருக்கிறது என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் உறுதி செய்துள்ளார். ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். இந்த விலை உயர்வு சாமானியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்கும் என கூறியுள்ளார். 

மேலும் ஏர்டெல் நிறுவனம் எவ்வளவு விலை உயர்த்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏர்டெல் நிறுவனத்தைப் போலவே மற்ற நிறுவனங்களும் விலை உயர்வு குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்