திருமண விழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் திருமணத்திற்காக ராஜன்பூரில் இருந்து மச்காவுக்கு சிந்து நதிக்கரை வழியாக சுமார் 100 பேரை ஏற்ரிக்கொண்டு சிறிய ரக கப்பல் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நீரின் வேகம் அதிகரித்ததாலும், கப்பலில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதாலும் கப்பல் நிலை தடுமாறி கவிழ்ந்தது. அப்போது கப்பலில் பயணித்த அனைவரும் நீரில் முழ்கினார். இதனையடுத்து தகவலறிந்து வந்த மீட்பு படையினர், மீட்பு படையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் பெண்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எஞ்சியுள்ளவர்களை மீட்கு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கோர சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர், இரங்கல் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…