நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பூம் பூம் மாடு குறித்த கதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த இணையவாசிகள் கமெண்டில் அவரை கலாய்த்து வருகின்றனர்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, "அண்ணா! என்னப்பா..?
முன்னாடி எல்லாம் நம்ம வீடுகளுக்கு நல்ல காலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குதுன்னு பூம் பூம் மாட்டோட குடுகுடுப்பை அடிப்பாங்களே. இப்பெல்லாம் ஏன் அண்ணா அவங்கெல்லாம் வர்றதில்லை?
அதுவா தம்பி..,
பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இந்த நாலு கட்சியும் இந்தநாட்டை ஆள்கிறவரை இனி எப்பவும் நல்ல காலம் பிறக்காதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சுப்பா...அதனால வர்றதில்லை தம்பி". என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் கமெண்டில் சென்று அவரின் இந்த பதிவிற்கு வசைபாடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…