Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரபரப்பு.. ஆம்பூர் மாணவரிடம் மத்திய உளவுத்துறை விசாரணை!!

Sekar July 30, 2022 & 15:26 [IST]
பரபரப்பு.. ஆம்பூர் மாணவரிடம் மத்திய உளவுத்துறை விசாரணை!!Representative Image.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரிடம் மத்திய உளவுத்துறையான ஐபி விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மீர்ஹிதாயாத்அலி. இவரது மகன் அனஸ் அலி (22 வயது) ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை மத்திய உளவுத்துறையான ஐபி, தமிழக உளவுத்துறை கியூ பிராஞ்ச் போலீசாருடன் சென்று அனஸ் அலியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடம் இருந்து 2 வெளிநாட்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பிரிட்டன், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்களுடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து தற்போது உளவுத்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே என்ஐஏ தமிழகத்தில் அதிகளவில் சோதனை நடத்தி வரும் நிலையில், உளவுத்துறையான ஐபி நேரடியாக ஒரு மாணவரை அழைத்து விசாரணை செய்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்