தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டது மறக்க முடியாத தருணம் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிள்ளார்.
பிரதமர் மோடி நேற்று ரூ.31 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கிவைக்க சென்னை வந்திருந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும் நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் திட்டங்களை தொடங்கிவைத்து பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.மேலும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து பிரதம மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆயிரத்து 152 வீடுகளை பயனாளிகளிடம் வழங்கினார்.
முன்னதாக அவருக்கு விமான நிலையத்தில் இருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, பல்வேறு காலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, அதிலும் தமிழக காலை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது அண்டை மாநில காலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. குழந்தைகள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். பெண்கள் மலர்த்துவினர்.
இந்தநிலையில், தனது தமிழக பயணம் இனிமையாகவும், மறக்க முடியாத ஒன்றாக இருந்ததாகவும் கூறி டுவிட்டரில் பதிவிட்ட மோடி, தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து, நேற்றைய விழாவின் முக்கிய காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…