Tamilnadu News Live : தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 32,625 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தமிழக தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகளை மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு
இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தமாக 32,625 பேர் கலந்துகொள்ள வில்லை என தமிழக தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில், 6 பாட தேர்வுகளையும் அதாவது மொத்த தேர்வுகளையும் 30,719 மாணவர்கள் எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
மேலும், 10 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு 45,618 மாணவர்கள் எழுதவில்லை எனவும் தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்ற நிலையில் அதிகமான மாணவர்கள் ஏன் எழுதவில்லை என்பது பெரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…