இந்தியாவில், சீக்கியர்களின் புனித தலமாக விளங்கும் பொற்கோவில் ஆன அமிர்தசரஸ் பொறிகோவிலுக்கு அருகில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக ஐந்து நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநில காவல்துறை ஆணையரான கௌரவ் யாதவ் அவர்கள் கூறியதாவது சீக்கிய மதத்தின் புனித கோவிலான அமிர்தசரஸின் பொற்கோவிலுக்கு வெளியே மே 6, 8 மற்றும் 10 நள்ளிரவில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில், சந்தேக நபர்களில் ஒருவர் கட்டிடத்தின் மேலிருந்து ஒரு பையில் சுமார் 200 கிராம் வெடிபொருள்கள் அடங்கிய தற்காலிக வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறினார். இதே போல, திங்கள் கிழமை இரண்டாம் வெடிகுண்டு வெடிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது குண்டுவெடிப்பு பற்றிய கூடுதல் விவரங்களைப் போலீசார் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்புக்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…