பிரபல பால் நிறுவனமாக விளங்கும் அமுல் நிறுவனத்தின் மீது தற்போது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. இது குறித்த வீடியோ வைரலான நிலையில், இது போலி என அமுல் நிறுவனம் கூறியுள்ளது.
பால் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் அமுல், அதன் பிராண்டான லஸ்ஸி பாக்கெட்டில் பூஞ்சை வளர்வதாகக் காட்டில் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவை போலி என அமுல் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த வீடியோவில் போலியான தகவல்களைப் பரப்புவதாகவும், தேவையற்ற விஷயங்களை நுகர்வோர் மத்தியில் ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய போது, அமுல் லஸ்ஸி பேக்குகள் காலாவதியாகும் தேதிக்குள் இருந்தாலும், அதில் பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரல் வீடியோவில் உள்ள குற்றச்சாட்டை அமுல் எதிர்த்துள்ளது. மேலும், இந்த வீடியோவில் காணப்பட்ட பாக்கெட்டுகளின் துளை பகுதி சேதமடைந்ததாகவும், இந்த இடத்தில் இருந்து திரவம் கசிந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். இதனால், இந்தப் பாக்கெட்டுகளில் பூஞ்சை வளர்வதற்கான காரணமாக இருக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து அமுல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, வீடியோவை வெளியிட்டவர் இந்த குற்றச்சாட்டை தெளிவுபடுத்த எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை அல்லது அவர்களது இருப்பிடமும் வெளியிடப்படவில்லை” என தெரிவித்துள்ளது. நிறுவனர் கூறியதாவது, “அமுல் லஸ்ஸியானது எங்களின் அதிநவீன பால் பண்ணைகளில் தயாரிக்கப்படுகிறது” எனக் கூறினார். மேலும், இந்த தயாரிப்பு தரம் மற்றும் பேக்கேஜிங்கானது கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது எனவும் கூறினார். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்ட ஒரு நிலையான நடைமுறையாக அமுல் செயல்படுவதாகக் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…