ஆந்திரப்பிரதேசம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் உள்ள பிராண்டிக்ஸ் இந்தியா அப்பேரல் சிட்டியில் (BIAC) அமைந்துள்ள சீட்ஸ் இன்டிமேட் அப்பேரல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (சீட்ஸ்) நிறுவனத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி ஏற்படுத்தி போலவே மீண்டும் ஒரு வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
முதற்கட்டமாக வெளியான தகவல்களின்படி சுமார் 17 பெண் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அங்கு இருந்த ஊழியர்களும், சிஐடியு உறுப்பினர்களும், 80க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் வாயுவை சுவாசித்ததால் நோய்வாய்ப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
துர்நாற்றம் வீசும் இந்த வாயுவை சுவாசித்ததன் மூலம் குமட்டல், கண்களில் எரியும் உணர்வு, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் அனகாப்பள்ளியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 36 பேர் அனகாப்பள்ளியில் உள்ள என்டிஆர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 46 பேர் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிஐடியுவின் ஆர்.ராமு தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் படி,சுமார் 50 ஊழியர்கள் என்டிஆர் மருத்துவமனை உட்பட இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் நல்வாய்ப்பாக யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது இல்லை என தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 3 அன்று ஓத்தே போன்று ஒரு சம்பவம் நடந்தது, ஆனால் இதுவரை அது குறித்த விசாரணை அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்பட வில்லை என சிஐடியுவின் கோட்டேஸ்வர ராவ் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏ.பி.பி.சி.பி., அதிகாரிகள் ஆலைக்கு சென்று ஆய்வு செய்து பின்னர் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…