ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர், விடுதி அறைக்குள் மற்றொரு மாணவனை இரக்கமின்றி தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான சம்பவத்தின் வீடியோவில், பாதிக்கப்பட்டவர் கெஞ்சுவதையும், மன்னிப்பு கேட்பதையும் தாக்கியவர்கள் தொடர்ந்து அவரைத் தாக்குவதையும் காட்டுகிறது. அவரது சட்டை கிழிந்ததாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எஸ்ஆர்கேஆர் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர் அங்கித், உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மார்பு மற்றும் கைகளில் காயங்களும் உள்ளன.
அவர் எதற்காக தாக்கப்பட்டார் என்பது சரியாக தெரியவராத நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…