Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திமுக முன்னாள் அமைச்சர் கூறியது பொய்யென நிரூப்பித்தால் அரசியலை விட்டு விலக தயார் - அண்ணாமலை

Baskaran Updated:
திமுக முன்னாள் அமைச்சர் கூறியது பொய்யென நிரூப்பித்தால் அரசியலை விட்டு விலக தயார் - அண்ணாமலை Representative Image.

சென்னை: திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு பேட்டியில் அளித்த தகவலை பொய்யென நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு பேட்டியில் கூறியதை நான் தெரிவிக்கிறேன். நாங்களாகவே மெரிட் லிஸ்ட்டை உருவாக்கி, யாருக்கெல்லாம் நூறு சதவீதம் சீட் கிடைக்குமோ அவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் வழங்கிய பின்னர், அரசு கல்லூரியில் மீதமுள்ள சீட்டை விற்று விடுவோம் என என முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

நான் பொய்யான தகவலை தெரிவிக்கவில்லை இது பொய் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்..2006 இல் இருந்து 2011 ஆம் ஆண்டில் ஏன் தனியார் மருத்துவமனைகள் அதிகமானது. நீட் வருவதற்கு முன்பு மருத்துவ கலந்தாய்வில் சூதாட்டம், ஊழல் நடந்தது. கருணாநிதியே இதை ஒப்புக்கொண்டதாக ஆற்காடு வீராசாமி அன்று தெரிவித்தார்... ஏழைத்தாயின் மகனும், விவசாயின் மகனும் மருத்துவராக வேண்டும் என்கின்ற நோக்கத்தில் நீட் கொண்டுவரப்பட்டது.

தனியார் மருத்துவ கல்லூரிகளோடு செட்டிங் செய்து பணம் சம்பாதித்தார்கள். நீட் வந்த பிறகு அது குறைந்துள்ளது. தற்போது மத்திய கலந்தாய்வும் இந்த பிரச்சனைகளை தீர்க்க வழிவகுக்கும்.. சாமானிய மக்கள் கூட மருத்துவம் பெறுவதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த முயற்சி பலனளிக்கும்.

2024 தேசிய ஜனநாயக கூட்டணியில், புதுச்சேரியும் சேர்த்து 40 இடங்களை கைப்பற்றுவோம். யாருக்கு எவ்வளவு சீட் ஒதுக்கப் போகிறோம் என்பது அப்போது முடிவு செய்வோம். அமித்ஷாவின் பேச்சுக்கு அதிமுகவின் ஜெயக்குமார், செம்மலை போன்றோர் கருத்து தெரிவித்த நிலையில் அந்த கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்துள்ளோம் என்றால் அதற்கு பாஜக தான் காரணம். ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு மடங்கு மருத்துவ சீட் அதிகப்படுத்தியுள்ளோம்.. இன்று மாலை இந்த புள்ளி விவரங்களை வெளியிடுகிறேன். மருத்துவத் துறையில் சாதனைகள் செய்துள்ளோம். 262 கோடி தடுப்பூசி போட்டு உள்ளோம்.

ஒரு பூத் தலைவரும் கூட பாஜகவின் ஒரு உயர்ந்த பொறுப்பிற்கும் செல்ல முடியும் என அமித்ஷா கூறியுள்ளார். ஜனா கிருஷ்ணமூர்த்தி பாஜக தலைவராக வில்லையா?1982ல் அமித்ஷா பூத் தலைவராக இருந்தார். பாஜகவில் மட்டும் தான் ஒரு சாதாரண தொண்டனும் கூட எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என பேசினார்.. முதல்வர் மு.க ஸ்டாலின் நான்கு நாட்களாக அவசரப்பட்டு கொண்டிருக்கிறார்.. மு.க ஸ்டாலினுக்கு மாற்றாக கனிமொழி வந்து கொண்டிருக்கிறார்.

திமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவருக்கு ஸ்டாலின் மீது அதிருப்தி உள்ளது. எனவே கனிமொழி பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். 3ஜி என்பது மூன்று தலைமுறை குடும்பம் என்பதை அமித் ஷா நேற்று குறிப்பிட்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், கோபாலபுரத்தில் பிறக்காத ஒருவர் உங்கள் கட்சியில் பொறுப்பாக வர முடியுமா? புதிய அமைச்சர்கள் கூட வாரிசுகளாக தான் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது திமுக தான். அனைத்து மாவட்டங்களிலும் குறுநில மன்னர்களை உருவாக்கியுள்ளனர். ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கருணாநிதியின் மகனாக இல்லாமல் இருந்தால் ஸ்டாலினால் முதல்வராக இருந்திருக்க முடியுமா? பாஜகவில் நிலைமை அப்படி இல்லை. கருணாநிதி மகன் என்பதை விட ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது.

கருணாநிதி எனும் அலை பெயரை பயன்படுத்தி வருகிறார். திமுகவின் அஸ்திவாரம் மிகவும் உறுதியாக உள்ளது யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஒரு கிளைத் தலைவர் கூட சேப்பாக்கத்தில் வெற்றி பெறுவார்.. ஸ்டாலினுக்கு அரசியலையே தெரியவில்லை. முதல்வர் கேட்ட கேள்விக்கு அமித்ஷா நேற்று பதிலளித்தார். டி ஆர் பாலுவை ஏன் மறுமுறை (2009) கேபினட் மந்திரியாக மன்மோகன் சிங் ஆக்கவில்லை. ஒன்பது ஆண்டுகளில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் யாராவது ஒரு குண்டூசியை திருடினார்கள் என சொல்ல முடியுமா. அதனால்தான் திமுகவினருக்கு வயிறு எரிகிறது. ஏன் பால்வளத் துறை அமைச்சரையும், நிதி அமைச்சரையும் மாற்றினீர்கள் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்