Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அண்ணாமலை...! பேரைச் சொன்னாலே தமிழகமே அதிருதுல்ல..!! - பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் பேச்சு..

Saraswathi Updated:
அண்ணாமலை...! பேரைச் சொன்னாலே தமிழகமே அதிருதுல்ல..!! - பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் பேச்சு..Representative Image.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரைச் சொன்னாலே தமிழகமே அதிர்வதாக கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மேற்கு தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், அண்ணாமலை பெயரை சொன்னாலே தமிழகம் அதிர்கிறது. அண்ணாமலையால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தி.மு.க.வினரின் தூக்கம் போய்விட்டது.  வரும் தேர்தலில் பா.ஜ.க. என்ன முடிவு எடுக்கப்போகிறது என தமிழகமே எதிர்பார்க்கிறது. 

அண்ணாமலை தலைமையில் ஊழலற்ற ஆட்சி அமையும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். 'என் மண் என் மக்கள் ' எனும் பெயரில் ஜூலை 9-ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் அண்ணாமலை நடைபயணம் செய்ய உள்ளார். அந்த பயணம் முடியும்போது தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கிவிடும். 

தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டில் ஒன்பதரை லட்சம் கோடி நிதியாக கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவை உலகமே வியப்பாக பார்க்கும் வகையில் மோடி மாற்றிவிட்டார். 

இவ்வாறு கரு.நாகராஜன் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்