இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக மீண்டும் ஒரு மொய் விருந்தை புதுக்கோட்டையை சேர்ந்த டீ கடைக்காரர் வரும் மே 22ஆம் தேதி நடத்துகிறார்.
திருவரங்குளம் அருகே மாங்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சிவக்குமார் (45). மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், வம்பன் 4 சாலை பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை கேப்பறை பகுதியிலும் ஒரு கடையை தொடங்கி நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 2018-ல் கஜா புயலால் அந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டபோது தனது கடையில் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பாக்கி பணமான சுமார் ரூ.28 ஆயிரத்தை தள்ளுபடி செய்தார். அப்போது, பொதுமக்களுக்கு அரசே எந்தக் கடனையும் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடாத சமயத்தில் இவரது செயல்பாடானது தமிழகம் முழுவதும் பேசப்பட்டது.
அதன் பின்னர், கொரோனா பரவலின் தொடக்கத்தில் மக்களுக்கு உதவி செய்வதற்காக வம்பன் 4 சாலையில் உள்ள அவரது டீக்கடையில் மக்களுக்கு மொய் விருந்து நடத்தினார். அன்று அங்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் பணத்தை செலுத்தி சென்றவர்களுக்கு டீ, வடை இலசமாக வழங்கப்பட்டது. அதன் மூலம் கிடைத்த ரூ.14,452 மற்றும் அவரது வங்கிக் கணக்குக்கு வந்த ரூ.5 ஆயிரத்தையும் சேர்த்து ஆட்சியர் வழியாக அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த செயலும் அனைவராலும் பாரத பட்டது.
இந்நிலையில் இலங்கையில் மக்கள் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இலங்கை அரசு திவாலாகி விட்டது, அந்த நாடு மீண்டு எழுந்துவருவது மிகவும் கடினம் என அந்த நாட்டு மத்திய வாங்கி கூறியுள்ளது. இந்நிலையில் சிவகுமார் மீண்டும் தனது கடையில் மொய் விருந்து ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். வரும் மே 22 அன்று இந்த மொய் விருந்தை நடத்தி அதன் மூலம் வரும் பணத்தை தமிழக அரசின் உதவியுடன் இலங்கையில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு அனுப்பிவைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார். அவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…