நம் நாட்டில் திருவிழாவிற்கு பஞ்சமே இருக்காது. அதுமட்டுமல்லாமல், நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் குறிக்கும் விதமாக ஒவ்வொரு பண்டிகையும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இப்படி அனைவராலும் வெகு சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் 'தை பொங்கல் திருநாள்'. இதை பொதுவாக 'அறுவடை திருவிழா' என்று சொல்வார்கள். இந்த மங்களகரமான நாளில் மகர சங்கராந்தி வழிபாடு மற்றும் சூரிய கடவுளையும் வழிபாடு செய்வோம். நான்கு நாள் திருவிழாவான இந்த பொங்கல் பண்டிகை ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றிருப்பது மேலும் சிறப்பு. இந்த இனிமையான நாளை மேலும் இனிமையாக்க உற்றார், உறவினருக்கு வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாறிக் கொள்வோம்.
அன்பும், ஆனந்தமும் பொங்கிட..!
அறமும் வளமும் தழைத்திட..
இல்லமும் உள்ளமும் பொங்க..!
அன்பு நெஞ்சங்களுக்கு
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!
இல்லங்களில் பொங்கல் பொங்கிட,
உள்ளங்களில் ஆனந்தம் பொங்கிட,
உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும்
என் உள்ளம் பொங்கும்,
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
தித்திக்கும் கரும்பை போல உங்கள்
வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும்..
இனிய தமிழர் திருநாளாம்..
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
உள்ளம் மகிழ, இல்லம் நிறைய அனைவருக்கும்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
புதுமை பொங்க, இனிமை தங்க...
செல்வம் பொங்க, வளமை தங்க...
அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மக்களே!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…