Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Fishermen : கடலில் தத்தளித்த மீனவர்கள்..? பத்திரமாக மீட்ட கடலோர காவல்படை..!

Muthu Kumar May 20, 2022 & 14:16 [IST]
Fishermen : கடலில் தத்தளித்த மீனவர்கள்..? பத்திரமாக மீட்ட கடலோர காவல்படை..!Representative Image.

Fishermen : கடலில் தத்தளித்த புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடலில் தத்தளித்த மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடலில் விரிக்கப்பட்ட நண்டு வலையை எடுக்க புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மாலை கரைதிரும்ப வேண்டியவர்கள் திரும்பாததால் உறவினர்கள் கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் 2 படகுகளில் கடலுக்கு சென்று தேடியுள்ளனர். மேலும் நேற்று முழுவதும் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர்.

மீட்பு

இந்நிலையில் இன்று மீண்டும் கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் என பலரும் 20 நாட்டுப்படகுகளில் கடலுக்கு சென்று தேடியுள்ளனர். அப்போது கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 4 பேரையும் கண்டுபிடித்து மீட்டனர்.

விசாரணை

4 பேரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்த கடலோர காவல்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், நண்டு வலை எடுத்துக் கொண்டிருந்தபோது காற்றின் வேகம் அதிகரித்ததால் படகோடு இழுத்து செல்லப்பட்டது. பின்னர் படகு உடைந்ததால் தண்ணீரில் இரவு முழுவதும் தத்தளித்ததாக கூறியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்