TNPSC : டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதையடுத்து தற்காலிக பொறுப்புதலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக இருந்த அருள்மொழி ஐ.ஏ.எஸ் 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவரது பதவிக்கு புதிய தலைவராக தஞ்சாவூரைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.
இவர், தருமபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கடந்த 9ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை தற்காலிக தலைவராக ஆட்சியர் முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…