அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் ரயில் நிலையம் அருகே வசிக்கு நடராஜன்- உமா தம்பதியினரின் மகள் நிஷாந்தி (18) கடந்த ஆண்டு12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இதையடுத்து கடந்த ஒரு வருடமாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், நாளை நீட் தேர்வுக்கு முன்னதாக மாணவி நிஷாந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேதியியல் மற்றும் உயிரியில் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து ஊரிலேயே இருக்க வேண்டும் என கூறி கடிதம் எழுதி வைத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
நீட் தேர்வுக்காக நன்றாக படித்திருந்தாலும் தோல்வி அடைந்து விடுவேனோ என பயமாக உள்ளது எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…