ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலின் போது பலத்த காயமடைந்த ராணுவத் தாக்குதல் நாய் இன்று உயிரிழந்தது.
கடந்த திங்கட்கிழமை காலை, தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் டாங்பாவா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டிற்குள் ஜூம் என்ற தனது தாக்குதல் நாயை இராணுவம் அனுப்பியது. அங்கு அது இரண்டு துப்பாக்கிச் சூடுகளைப் பெற்று பலத்த காயமடைந்தது.
இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 11:45 மணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. ஜூம் தெற்கு காஷ்மீரில் பல ராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி உள்ளது.
ஜூம் கடந்த திங்கட்கிழமை நடந்த தாக்குதலின்போது உடலில் தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையிலும், தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு, இரண்டு பேரை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…