Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆருத்ரா ஹிஜாவு வழக்கு தொடர்பாக புகார் அளிக்க தனிப்பிரிவு தொடக்கம்: ஐஜி ஆசியம்மாள் தகவல்

Baskarans Updated:
ஆருத்ரா ஹிஜாவு வழக்கு தொடர்பாக புகார் அளிக்க தனிப்பிரிவு தொடக்கம்: ஐஜி ஆசியம்மாள் தகவல்Representative Image.

ஆருத்ரா ஹிஜாவு மற்றும் ஐஎஃப்எஸ் வழக்குகளில் பொதுமக்கள் புகார் அளிக்காதவர்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்ற பிரிவின் ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

பொருளாதார குற்ற பிரிவின் ஐஜி ஆசியம்மாள் மற்றும் உயரதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். முதற்கட்டமாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 3500 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒரு லட்சத்து 9 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை புகார் அளிக்காதவர்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக தனியாக பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஐசி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். அந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த இருபதாம் தேதி 40 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நிர்வாக இயக்குனர் ராஜசேகர் மற்றும் 8 இயக்குனர்கள் பதிவு செய்யப்படாத இயக்குனர்கள் 19 பேர், மேலாளர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 526 பேர்  இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளனர். 603 வகையான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். 4000 பக்க அளவில் முதற்கட்ட குற்ற பத்திரிக்கை ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறினார்

ஹிஜாவு மோசடி வழக்கில் கடந்த மே மாதம் 17ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் டிஜிட்டல் ஆதாரங்கள் அடிப்படையில் முதலீட்டாளர்கள் 89 ஆயிரத்து 433 பேர் எனவும் நேரடியாக பெறப்பட்ட புகார்கள் என்ற அடிப்படையில் 13 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாகவும் தனியாக புகார் பெறுவதற்கு பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் புகார் அளிக்காதவர்கள் புகார் அளிக்கலாம் என கூறியுள்ளார். இந்த வழக்கில் கடந்த 16ஆம் தேதி சுஜாதா காந்தா கோவிந்தராஜுலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவிந்தராஜ்லுவிடமிருந்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐ எஃப் எஸ் மோசடி விவகாரத்தில் 3170 முதலீட்டாளர்களிடம் புகார்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தியதில் 700 கோடி வரை மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 19 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக 443 பேரிடம் சமீபத்தில் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த மே 25ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக ஜானகிராமன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், மே 14ஆம் தேதி ஹேமந்த் குமார் என்ற ஓய்வு பெற்ற காவலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்தார்

ஏ ஆர் டி ஜூவல்லர்ஸ் மோசடி தொடர்பாக 772 முதலீட்டாளர்கள் என இருந்த நிலையில், கூடுதலாக 1850 பேர் வரை புகார் அளிக்கப்பட்டு 28.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ஆல்வின் ராபின் ஆகிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் மே 22 ஆம் தேதி கணேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக ஒன்பது இடங்களில் இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்பது புள்ளி 60 லட்ச ரூபாய் பணமும், 30 சவரன் தங்கம் 60 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று கார்கள் மற்றும் 24 வங்கிகள் முடக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடியே 5 லட்ச ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது. இரண்டு சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முகப்பேரில் உள்ள ஏ ஆர் மாலில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் 60 பேர் இடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை நடைபெறுகிறது

திருவண்ணாமலை தொடர்பான சிவிஆர்எஸ் வழக்கில் 39 கோடி ரூபாய் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர் விசாரணையில் 30 கோடி ரூபாய் அளவில் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எஸ் எஸ் குரூப் என்ற நிறுவனத்தின் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, 20 புகார்கள் பெறப்பட்டுள்ளது. மோசடிக்கு உள்ளானவர்கள் 2087 பேர் எனவும் இவர்கள் இழந்த பணத்தின் மதிப்பு 77 லட்சம் என தெரியவந்துள்ளது. இதில் 5 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜ்குமார் சீனிவாசன் என்பவரை கடந்த 23ஆம் தேதி கைது செய்துள்ளோம்.

நியமிக்ஸ் ப்ரோபெர்ட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமோசடி தொடர்பாக  புது வழக்கு ஒன்று கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 15 புகார்களில் நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இதில் 17 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஐந்து நிறுவனங்கள் என தெரியவந்துள்ளது. இதன் துணை நிறுவனங்கள் 15 செயல்பட்டு வருவதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 15 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 5.5 லட்சம் 1009 கிராம் தங்க நகை, 13 கிலோ வெள்ளி பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 லட்சம் மதிப்புள்ள நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 62 அசல் பத்திர  ஆவணங்கள் பிரிவுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் புகார் அளிப்பவர்கள் ஒரு சிலருக்கு பணம் கொடுத்து குற்றவாளிகள் சரி செய்வதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்குமாறு ஐஜி ஆசி அம்மாள் தெரிவித்துள்ளார்.

ஐ எஃப் எஸ் மோசடி வழக்கில் 132 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் வழிகாட்டுதல் மதிப்பு 32 கோடியே என கணக்கிடப்பட்டுள்ளது இதன் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

ஆருத்ரா கோல்ட் கட்டிங் விவகாரத்தில் 49 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் வழிகாட்டுதல் மதிப்பு 23 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகியாக இருந்த ஹரிஷ் பெயரில் உள்ள ஐந்து சொத்துக்கள் அவரது மனைவி பேரில் உள்ள ஒரு சொத்து அவரது சகோதரி மாலினி பெயரில் ஒரு சொத்தும், ஹரிஷ் உறவினர்கள் பெயரில் இரண்டு சொத்துகளும், ஹரிஷ் நண்பர் பெயரில் இரண்டு சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹிஜாவு மோசடி வழக்கை பொறுத்தவரையில், மொத்தம் 139 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 13.81 கோடி வழிகாட்டுதல் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. ஆருத்ரா ஹிஜாபு ஐ எஃப் எஸ் ஆகிய மூன்று வழக்குகளில் ஒன்பது பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என ஐஜி தெரிவித்துள்ளார். ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷுக்கு ரூசோ என்ற குற்றவாளி பன்னிரண்டரை கோடி பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்த அடிப்படையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆர் கே சுரேஷ் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகவில்லை. முக்கியமான ஆருத்ரா ஹிஜாபு மற்றும் ஐஎப்எஸ் வழக்குகளில் தலா 500 முகவர்கள் அடையாளம் காணப்பட்டு முதற்கட்டமாக 100 முகவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யும் நடவடிக்கை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்

ஆருத்ரா வழக்கை பொறுத்தவரையில் 35 முகவர்கள் சம்மனுக்கு ஆஜராகி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விசாரிக்கப்படும் முகவர்கள் எந்த அளவில் வசூல் செய்து மோசடிக்கு தொடர்பில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் பொறுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏ ஆர் டி மோசடி விவகாரத்தில் தமிழக முழுவதும் 47 கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு மோசடியை அரங்கேற்றி இருப்பதாக கைது செய்யப்பட்ட கணேஷ் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

இதுவரை பொருளாதார குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பெரும்பாலான வற்றின் முதல் தகவல் அறிக்கையை மத்திய விசாரணை பிரிவு பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்