இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் பரவி வரும் ஒருவகை மூளைக்காய்ச்சலால் 23 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் மழைக் காலங்களில் ஜப்பானிய மூளை காய்ச்சல் எனும் ஒருவகையான காய்ச்சல் ஏற்படுவது வழக்கமாக ஒன்று தான். தற்போது அசாமில் பருவமழை காலம் என்பதால் மழை பொழிந்து ஏற்கனவே வெள்ளத்தால் 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில் மேலும் சோகத்தை அதிகரிக்கும் வகையில் ஜப்பானிய மூளை காய்ச்சல் காரணமாக ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்து உள்ளனர் என அசாமின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ள தகவல் அம்மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் சுகாதாரத்துறை தனது அறிக்கையில் மேலும், தற்போது 160 பேருக்கு இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…