Karnataka Female Lawyer: கர்நாடகா மாநிலத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவரை சாலையோரமாகக் காட்டுத் தனமாக அடித்து, உதைத்து உள்ளார். ஆனால், சாலையோரத்தில் நின்ற மக்களில் ஒருவர் கூட உதவ முன் வரவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரையும் கவனம் ஈர்த்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், தாக்குதலுக்கு உள்ளான பெண் வழக்கறிஞர் சங்கீதா என கூறப்படுகிறது. இந்தப் பெண் வழக்கறிஞருக்குப் பக்கத்து வீட்டில் வசிப்பவர் தான் மகாந்தேஷ். இவர் தான், தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவருக்குமிடையே நீண்ட நாள்களாக முன்பகை இருந்து வந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அன்று நடந்துள்ளது. தாக்குதலுக்கு உண்டான பெண் வழக்கறிஞர் ஆன சங்கீதா போலீசில் புகார் அறிவித்தார். மேலும், மகாந்தேஷும் தொடர்ந்து சங்கீதா தொந்தரவு செய்து வருவதாகப் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளிவந்தன. இது போல இதற்கு முன்னரே பல முறை ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…